Friday, January 26, 2018

பாடல் பெற்ற தலம் - பேணுபெருந்துறை

தேவார பாடல் பெற்ற தலம் எண்: 181
தென்கரை தலம் எண்: 64
மற்ற பெயர்கள்: திருப்பந்துறை
மாவட்டம்: தஞ்சை
இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்
இறைவி:  மங்களாம்பிகை,மலையரசி
தல விருட்சம்: வன்னி
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: மங்கள தீர்த்தம்


சில தகவல்கள்:
* ஊமையாகிய முருகனுக்கு பேச்சு மீண்டும் வந்த தலம்
* சம்பந்தர் பாடிய தலம். 
* கிழக்கு நோக்கிய சந்நிதி.
* மூன்று நிலை கோபுரம்
* இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது
* கரிகாற்சோழன் காலத்தில் இது செங்கற்கோயிலிலிருந்து கற்கோயிலாகியது
* தண்டபாணி சுவாமியின் அபிஷேக தேனை நாற்பத்தைந்து நாட்கள் பருகி வர பேச்சு குறைபாடு நிவர்த்தி.


எனது குறிப்புகள்:
* இந்த கோவிலுக்கு இரண்டு முறை பகல்பொழுதில் சென்ற பொழுது மூடி இருந்தது. ஒரு முறை குருக்கள், பூஜை முடிந்து நடை சாத்திவிட்டு வரும்பொழுது சென்றதால் இறைவனை காண முடியவில்லை. இந்த முறை மாலை பொழுதில் சென்றதால், கோவில் திறந்திருந்தது. ஆனால் குருக்கள் இல்லை. ☺
* இத்தலத்திற்கு மிகஅருகில் நாச்சியார் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று

தரிசன நேரம்: 
காலை 8 முதல்  12 வரை மற்றும் மாலையில் 5 முதல்  வரை

செல்லும் வழி:
கும்பகோணம் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.




பதிகங்கள்:
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்துபுலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசிநலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகிமலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே. - திருஞானசம்பந்தர்

புகைப்படங்கள்:









No comments:

Post a Comment