Friday, January 26, 2018

பாடல் பெற்ற தலம் - பேணுபெருந்துறை

தேவார பாடல் பெற்ற தலம் எண்: 181
தென்கரை தலம் எண்: 64
மற்ற பெயர்கள்: திருப்பந்துறை
மாவட்டம்: தஞ்சை
இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர்
இறைவி:  மங்களாம்பிகை,மலையரசி
தல விருட்சம்: வன்னி
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: மங்கள தீர்த்தம்


சில தகவல்கள்:
* ஊமையாகிய முருகனுக்கு பேச்சு மீண்டும் வந்த தலம்
* சம்பந்தர் பாடிய தலம். 
* கிழக்கு நோக்கிய சந்நிதி.
* மூன்று நிலை கோபுரம்
* இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது
* கரிகாற்சோழன் காலத்தில் இது செங்கற்கோயிலிலிருந்து கற்கோயிலாகியது
* தண்டபாணி சுவாமியின் அபிஷேக தேனை நாற்பத்தைந்து நாட்கள் பருகி வர பேச்சு குறைபாடு நிவர்த்தி.


எனது குறிப்புகள்:
* இந்த கோவிலுக்கு இரண்டு முறை பகல்பொழுதில் சென்ற பொழுது மூடி இருந்தது. ஒரு முறை குருக்கள், பூஜை முடிந்து நடை சாத்திவிட்டு வரும்பொழுது சென்றதால் இறைவனை காண முடியவில்லை. இந்த முறை மாலை பொழுதில் சென்றதால், கோவில் திறந்திருந்தது. ஆனால் குருக்கள் இல்லை. ☺
* இத்தலத்திற்கு மிகஅருகில் நாச்சியார் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று

தரிசன நேரம்: 
காலை 8 முதல்  12 வரை மற்றும் மாலையில் 5 முதல்  வரை

செல்லும் வழி:
கும்பகோணம் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.




பதிகங்கள்:
நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவும் ஆகி ஓர் ஐந்துபுலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசிநலனொடு தீங்கும் தான் அலது இன்றி நன்கு எழு சிந்தையர் ஆகிமலனொடு மாசும் இல்லவர் வாழும் மல்கு பெருந்துறையாரே. - திருஞானசம்பந்தர்

புகைப்படங்கள்:









Tuesday, January 23, 2018

பாடல் பெற்ற தலங்கள் - கோவிலூர், இடும்பாவனம் மற்றும் கடிக்குளம்


எனது குறிப்புகள்:

ஆங்கில புத்தாண்டு(2018) அன்று அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் சீர்காழியிலிருந்து புறப்பட்டு(Bike) ஏழு மணி போல் கடிக்குளம் அடைந்தேன். காரைக்கால் - நாகப்பட்டினம் பாதை தவிர மீதி பாதை முழுதும் சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக நாகை முதல் முத்துப்பேட்டை வரையிலான ஈசிஆர் ரோடு உயர்தரம். கடிக்குளத்திலிருந்து இடும்பாவனம் வெறும் ஒரு கிமீ தொலைவுதான். இடும்பாவனத்திலிருந்து மந்திரபுரி(கோவிலூர்) பத்து மைல் தொலைவு. கடிக்குளத்திலும் இடும்பாவனத்திலும் அர்ச்சகர்கள் நான் சென்ற நேரத்தில் இல்லை.


கோவிலூர் எனும் திருவுசாத்தானம்


தேவார பாடல் பெற்ற தலம் எண்: 224
தென்கரை தலம் எண்: 107
மற்ற பெயர்கள்: மந்திரபுரி
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: மந்திரபுரீஸ்வரர் 
இறைவி:  பெரியநாயகி
தல விருட்சம்: மாமரம்  
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: அனுமன், மார்க்கண்டேய, கௌதம தீர்த்தங்கள்


சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடிய தளம்
* மூலவர் சுயம்புமூர்த்தி
* பல்வேறு சோழர்கள், பாண்டிய மன்னர் கல்வெட்டுகள் உள்ளன
* 14 தேவரடியார் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன
* ராமன் சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்றதால் இவ்வாலய ஈசன் மந்திரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்
* எமனால் ஏற்பட்ட வடுக்கள் நீங்க மார்க்கண்டேயர் இவ்வாலய தீர்த்தத்தில்  நீராடினார்
* சூதவனம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது
* விசுவாமித்திரருக்கு சிவபெருமான் நடனக்காட்சி அளித்த தலம் 
* ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உள்ளது. உள்ளே உள்ளே கோபுரம் கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது

தரிசன நேரம்: 
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 9 வரை

செல்லும் வழி:
முத்துப்பேட்டையில் இருந்து 2 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன





பதிகங்கள்:
கொல்லை ஏறு உடையவன், கோவணஆடையன்,பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்,முல்லை ஆர் புறவு அணி முது பதி---நறை கமழ்தில்லையான் உறைவுஇடம்  திரு உசாத்தானமே - சம்பந்தர்

புகைப்படங்கள்:

















இடும்பாவனம்


தேவார பாடல் பெற்ற தலம் எண்: 225
தென்கரை தலம் எண்: 108
மற்ற பெயர்கள்: வில்வவனம்
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: இடும்பவனேஸ்வரர், சற்குணநாதர்  
இறைவி:  மங்களவல்லி
தல விருட்சம்: வில்வம் 
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், பிரம தீர்த்தம், இமய தீர்த்தம்


சில தகவல்கள்:
இடும்பன் வழிபட்ட தலம்
* இடும்பன் சகோதரி இடும்பையை வீமன் மணந்ததால் வியாச முனிவரின் ஆணைப்படி இடும்பாவனம் என் பெயர் பெற்றது 
* அகத்தியருக்கு இறைவன் திருமண கோலம் காட்டிய இடம்
* பிரமன், எமன், ராமன் வழிபட்ட தலம்
* பித்ரு வழிபாடு தலம்
* சம்பந்தருக்கு மணல்கள் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்ததால் தலைகீழாக நடந்து இத்தலத்தை அடைந்தார்
மூலவர் சுயம்பு 


தரிசன நேரம்: 
காலை 7:30 இருந்து 12:30 வரை மற்றும் மாலையில் 4:30 முதல் 8:30 வரை

செல்லும் வழி:
திருத்துறைப்பூண்டியில் இருந்து 12 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன





பதிகங்கள்:

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,சினம் ஆர்தரு திறல் வாள்எயிற்று அரக்கன் மிகு, குன்றில்இன மா தவர் இறைவர்க்கு இடம்  இடும்பாவனம் இதுவே
 - சம்பந்தர்  



புகைப்படங்கள்:










கடிக்குளம்


தேவார பாடல் பெற்ற தலம் எண்: 226
தென்கரை தலம் எண்: 109
மற்ற பெயர்கள்: கற்பகநாதர் குளம் 
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: கற்பகநாதர், கற்பகேஸ்வரர்
இறைவி:  பாலசவுந்தரியம்மை
தல விருட்சம்: பலா 
மொத்த பதிகங்கள்:  1
தீர்த்தம்: விநாயக தீர்த்தம்

சில தகவல்கள்:
மூலவர் சுயம்பு
* இறைவன் எட்டுபட்டைகளுடன் உள்ளார்
* சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம்
* கற்பகவிநாயகர் இறைவனை வேண்டி மாங்கனி பெற்ற தலம்
* இராமன் வழிபட்ட தலம்.

* விநாயகர், கஜலக்ஷ்மி, நால்வர், பைரவர் சன்னதிகள் உள்ளன
* அருகில்(2 KM) தொலைவில் உள்ள துளசியம்பட்டினத்தில் அவ்வை சன்னதி உள்ளது 

தரிசன நேரம்: 
காலை 6 இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
திருத்துறைப்பூண்டியில் இருந்து 13 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன





பதிகங்கள்:

விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா விகிர்தனை, விழவு ஆரும்மண்களார் துதித்து அன்பராய் இன்புஉறும் வள்ளலை, மருவி, தம்கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தைப்பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ் ஆமே - சம்பந்தர் 

புகைப்படங்கள்:








Saturday, January 20, 2018

பாடல் பெற்ற தலம் - திருவிடைமருதூர்

தேவார பாடல் பெற்ற தலம் எண்: 147
தென்கரை தலம் எண்: 30
மற்ற பெயர்கள்: இடைமருது
மாவட்டம்: தஞ்சை
இறைவன்: மருதவாணர், மகாலிங்கேசர்
இறைவி:  பெருநலமுலையம்மை
தல விருட்சம்: மருத மரம்
மொத்த பதிகங்கள்:  12
தீர்த்தம்: காருண்ய அமிர்த தீர்த்தம், காவிரி


சில தகவல்கள்:
* வடக்கே ஸ்ரீ சைலம் வடமருது, தெற்கே திருப்புடைமருதூர் தென்மருது. இக்கோவில் இடைமருது கோவிலாகும்.
* சப்தஸ்தான தளங்களில் ஒன்று, பஞ்சகுரோசத்தலங்கலில் ஒன்று.
* மருத மரங்கள் நிறைந்த சோலையின் இடையே இருந்து இறைவன் தோன்றி உரோமச முனிவருக்கு காட்சி கொடுத்த தலம்.
* காசிக்கு சமமான ஆறு காவிரி தலங்களில் இதுவும் ஒன்று
* மூன்று பிரகாரங்கள். அசுவமேத பிரகாரம், கொடுமுடி பிரகாரம் மற்றும் பிரணவ பிரகாரமே அவை.
* மிகப்பெரிய சுதைநந்தி.
* இது நடுநாயகமான கோவில். சுற்றி சிறப்புமிக்க பல கோவில்கள் உள்ளன.
* வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட ஆலயம்.
* சென்ற வாசல் வழியே திரும்பக்கூடாது என்று கூறப்படுகிறது.
* கோபுர வாசல்களில் பட்டினத்தாருக்கு, பத்திரகிரியாருக்கும் சிலைகள் உள்ளன.
* மூவர் பாடிய தலமிது.
* திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.

தரிசன நேரம்: 
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரை

செல்லும் வழி:
கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையில் உள்ளது.




பதிகங்கள்:

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்கூற்றவன் கொல்புலித் தோலசைத்தநீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்ஏற்றவன் வளநகர் இடைமருதே - சம்பந்தர்
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்எந்தை யென்னிடை மருதினில் ஈசனைச்சிந்தை யால்நினை வார்வினை தேயுமே - அப்பர்
அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே - சுந்தரர்
புகைப்படங்கள்:


பிரகார சுதை சிற்பங்கள் 

கிழக்கு கோபுரம்
பிரணவ பிரகாரம் 

சுதை சிற்பங்கள்

ஆலய தூண்கள்
நுழைவாயில் 



கோபுரம் 





Friday, January 19, 2018

பாடல் பெற்ற தலம் - சிதம்பரம்

தேவார பாடல் பெற்ற தலம் எண்: 55
வடகரை தலம் எண்: 1
மற்ற பெயர்கள்: தில்லை, பெரும்பற்றப் புலியூர், தில்லைவனம்
மாவட்டம்: கடலூர்
இறைவன்: திருமூலநாதர், கூத்தப்பெருமான்
இறைவி:  சிவகாமிசுந்தரி 
தல விருட்சம்: தில்லைமரம்
தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்

சில தகவல்கள்:
* சைவ சமயத்தில் கோவில் என்றாலே அது சிதம்பரம் தான். 
* பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம்
* சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசுகளின் கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன
* நால்வரால் பாடப்பெற்ற தலம்.
* வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர் வருகை புரிந்தார். இது கிருஷ்ணா தேவராயரால் கட்டப்பெற்றது.
* கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகர் வருகை புரிந்தார். இது குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்றது.
* மேற்கு கோபுரம் வழியாக அப்பர் வருகை புரிந்தார். இது விக்கிரம சோழனால் கட்டப்பெற்றது.
* தெற்கு கோபுரம் வழியாக சம்பந்தர் வருகை புரிந்தார். இது காடவராயன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பெற்றது.
* இறைவன் ஆகாயமாய் இருக்கிறான் என்பதே சிதம்பர ரகசியம்.
* திருக்கோவிலுள் திவ்யதேசம் திருச்சிற்றகூடம் உள்ளது. இறைவன் கோவிந்தராஜ பெருமாள் ஆவார்.
* தடைபட்ட தேரினை சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி ஓடச்செய்தார்
* ஐந்து சபைகள் உள்ளன.
* மூலவர் ஆதிமூலநாதர் ஆவார். அவருக்கு வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் துவாரபாலர்களாக உள்ளனர்.
* புகழ்பெற்ற நாட்டியாஞ்சலி இங்கு நடைபெறுகிறது
* மார்கழி திருவாதிரை முக்கிய திருவிழா
* பொன்னம்பலத்தில் ஒன்பது கலசங்கள், 21600 ஓடுகள், 72000 ஆணிகள் உள்ளன.
* திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட தலம்.
* திருத்தலம் மாலிக் கஃபூரால் சூறையாடப்பட்டது. 

தரிசன நேரம்: 
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 5 முதல் 10 வரை

செல்லும் வழி:
தமிழ்நாடு முழுவதும் இருந்து பேருந்து வசதி உண்டு. கும்பகோணம் மார்க்கம் செல்லும் ரயில்கள் அனைத்தும் சிதம்பரம் செல்லும்



என் குறிப்புகள்:
* எனது பால்ய வயதிலிருந்தே இந்த கோயிலை பற்றி எனது பாட்டி கதைகள் கூறுவார். ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஆருத்திரா தரிசனம் காணச்செல்வார். 
* எனது குடும்பத்துடன் சிறுவயதில் கோவிலுக்கு வந்துள்ளேன். தற்போது அடிக்கடி செல்லும் கோவில்.
* சிவகாமி சன்னதியில் அருகில் இருந்து பார்த்தால் ஒரே சமயத்தில் நான்கு கோபுரங்களையும் காணலாம்.
* ஒவ்வொரு முறையும் தெற்கு வாயிலை காணும் பொழுதெல்லாம் நந்தனார் நினைவு வருத்தும்.
* தற்போது முழுக்க வணிகமயமாய் மாறி உள்ளது திருக்கோவில் :-(

பதிகங்கள்:
அலையார் புனல்சூடி ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடும் மகிழ்ந்தான் உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே - 
சம்பந்தர்
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானை பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக
விட்டானை மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்-
தொட்டானை புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே. - சுந்தரர்
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன் தன்னை
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பு அமரும் பூங்கொன்றைத்தாரான் தன்னை
அருமறையோடு ஆறு அங்கம் ஆயினானை
சுரும்பு அமரும் கடிபொழில்கள் சூழ் தென் ஆரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானை
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. - திருநாவுக்கரசர்
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் - மாணிக்கவாசகர்
புகைப்படங்கள்:


முகமண்டபம்
கிழக்கு கோபுரம்

விநாயகர் சன்னிதி

மேற்கு கோபுரம் 

வடக்கு கோபுரம்

தெற்கு கோபுரம்

உள்பிரகார ஓவியங்கள்

அம்மன் சந்நிதி 

மேற்கு கோபுரம்