எனது குறிப்புகள்:
ஆங்கில புத்தாண்டு(2018) அன்று அதிகாலை நாலரை மணிக்கெல்லாம் சீர்காழியிலிருந்து புறப்பட்டு(Bike) ஏழு மணி போல் கடிக்குளம் அடைந்தேன். காரைக்கால் - நாகப்பட்டினம் பாதை தவிர மீதி பாதை முழுதும் சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக நாகை முதல் முத்துப்பேட்டை வரையிலான ஈசிஆர் ரோடு உயர்தரம். கடிக்குளத்திலிருந்து இடும்பாவனம் வெறும் ஒரு கிமீ தொலைவுதான். இடும்பாவனத்திலிருந்து மந்திரபுரி(கோவிலூர்) பத்து மைல் தொலைவு. கடிக்குளத்திலும் இடும்பாவனத்திலும் அர்ச்சகர்கள் நான் சென்ற நேரத்தில் இல்லை.
கோவிலூர் எனும் திருவுசாத்தானம்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 224
தென்கரை தலம் எண்: 107
மற்ற பெயர்கள்: மந்திரபுரி
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: மந்திரபுரீஸ்வரர்
இறைவி: பெரியநாயகிதல விருட்சம்: மாமரம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: அனுமன், மார்க்கண்டேய, கௌதம தீர்த்தங்கள்
சில தகவல்கள்:
* சம்பந்தர் பாடிய தளம்
* மூலவர் சுயம்புமூர்த்தி
* பல்வேறு சோழர்கள், பாண்டிய மன்னர் கல்வெட்டுகள் உள்ளன
* 14 தேவரடியார் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன
* ராமன் சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்றதால் இவ்வாலய ஈசன் மந்திரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்
* எமனால் ஏற்பட்ட வடுக்கள் நீங்க மார்க்கண்டேயர் இவ்வாலய தீர்த்தத்தில் நீராடினார்
* சூதவனம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது
* விசுவாமித்திரருக்கு சிவபெருமான் நடனக்காட்சி அளித்த தலம்
* ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உள்ளது. உள்ளே உள்ளே கோபுரம் கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது
தரிசன நேரம்:
காலை ஆறில் இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 9 வரை* மூலவர் சுயம்புமூர்த்தி
* பல்வேறு சோழர்கள், பாண்டிய மன்னர் கல்வெட்டுகள் உள்ளன
* 14 தேவரடியார் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன
* ராமன் சிவபெருமானிடம் மந்திர உபதேசம் பெற்றதால் இவ்வாலய ஈசன் மந்திரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்
* எமனால் ஏற்பட்ட வடுக்கள் நீங்க மார்க்கண்டேயர் இவ்வாலய தீர்த்தத்தில் நீராடினார்
* சூதவனம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது
* விசுவாமித்திரருக்கு சிவபெருமான் நடனக்காட்சி அளித்த தலம்
* ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உள்ளது. உள்ளே உள்ளே கோபுரம் கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது
தரிசன நேரம்:
செல்லும் வழி:
முத்துப்பேட்டையில் இருந்து 2 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன
பதிகங்கள்:
கொல்லை ஏறு உடையவன், கோவணஆடையன்,பல்லை ஆர் படுதலைப் பலி கொளும் பரமனார்,முல்லை ஆர் புறவு அணி முது பதி---நறை கமழ்தில்லையான் உறைவுஇடம் திரு உசாத்தானமே - சம்பந்தர்
புகைப்படங்கள்:
இடும்பாவனம்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 225
தென்கரை தலம் எண்: 108
மற்ற பெயர்கள்: வில்வவனம்
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: இடும்பவனேஸ்வரர், சற்குணநாதர்
இறைவி: மங்களவல்லிதல விருட்சம்: வில்வம்
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், பிரம தீர்த்தம், இமய தீர்த்தம்
* இடும்பன் வழிபட்ட தலம்
* இடும்பன் சகோதரி இடும்பையை வீமன் மணந்ததால் வியாச முனிவரின் ஆணைப்படி இடும்பாவனம் என் பெயர் பெற்றது
* அகத்தியருக்கு இறைவன் திருமண கோலம் காட்டிய இடம்
* பிரமன், எமன், ராமன் வழிபட்ட தலம்* இடும்பன் சகோதரி இடும்பையை வீமன் மணந்ததால் வியாச முனிவரின் ஆணைப்படி இடும்பாவனம் என் பெயர் பெற்றது
* அகத்தியருக்கு இறைவன் திருமண கோலம் காட்டிய இடம்
* பித்ரு வழிபாடு தலம்
* சம்பந்தருக்கு மணல்கள் எல்லாம் சிவலிங்கமாக தெரிந்ததால் தலைகீழாக நடந்து இத்தலத்தை அடைந்தார்
* மூலவர் சுயம்பு
தரிசன நேரம்:
காலை 7:30 இருந்து 12:30 வரை மற்றும் மாலையில் 4:30 முதல் 8:30 வரைசெல்லும் வழி:
திருத்துறைப்பூண்டியில் இருந்து 12 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன
பதிகங்கள்:
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,சினம் ஆர்தரு திறல் வாள்எயிற்று அரக்கன் மிகு, குன்றில்இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே - சம்பந்தர்
கடிக்குளம்
தேவார பாடல் பெற்ற தலம் எண்: 226
தென்கரை தலம் எண்: 109
மற்ற பெயர்கள்: கற்பகநாதர் குளம்
மாவட்டம்: திருவாரூர்
இறைவன்: கற்பகநாதர், கற்பகேஸ்வரர்
இறைவி: பாலசவுந்தரியம்மைதல விருட்சம்: பலா
மொத்த பதிகங்கள்: 1
தீர்த்தம்: விநாயக தீர்த்தம்
சில தகவல்கள்:
* மூலவர் சுயம்பு
* இறைவன் எட்டுபட்டைகளுடன் உள்ளார்
* சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம்
* கற்பகவிநாயகர் இறைவனை வேண்டி மாங்கனி பெற்ற தலம்
* இராமன் வழிபட்ட தலம்.
* விநாயகர், கஜலக்ஷ்மி, நால்வர், பைரவர் சன்னதிகள் உள்ளன
* அருகில்(2 KM) தொலைவில் உள்ள துளசியம்பட்டினத்தில் அவ்வை சன்னதி உள்ளது
* இறைவன் எட்டுபட்டைகளுடன் உள்ளார்
* சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம்
* கற்பகவிநாயகர் இறைவனை வேண்டி மாங்கனி பெற்ற தலம்
* இராமன் வழிபட்ட தலம்.
* விநாயகர், கஜலக்ஷ்மி, நால்வர், பைரவர் சன்னதிகள் உள்ளன
* அருகில்(2 KM) தொலைவில் உள்ள துளசியம்பட்டினத்தில் அவ்வை சன்னதி உள்ளது
தரிசன நேரம்:
காலை 6 இருந்து 12 வரை மற்றும் மாலையில் 4 முதல் 8 வரைசெல்லும் வழி:
திருத்துறைப்பூண்டியில் இருந்து 13 கி.மீ. வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன
விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா விகிர்தனை, விழவு ஆரும்மண்களார் துதித்து அன்பராய் இன்புஉறும் வள்ளலை, மருவி, தம்கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தைப்பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ் ஆமே - சம்பந்தர்

























No comments:
Post a Comment